யாழில் கேரள கஞ்சா மீட்பு!!

 


யாழ்ப்பாணம் அனலைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கை கடற்படையினர் திங்கட்கிழமை அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில், படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 344 கிலோ 550 கிராம் எடையிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மூன்று சந்தேக நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் குறித்த படகையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இலங்கைக்கு சொந்தமான கடற்பிரதேசத்தில் குறிப்பாக வடக்கு கடற்பிரதேசத்தில் சட்டவிரோத பொருட்கொடுக்கல் வாங்கல் மற்றும் போதைப்பொருட்கள் கொடுக்கல் வாங்கல் என்பன இடம்பெற்று வரும் பின்னணியிலேயே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

yaal இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் இலங்கைப் பெறுமதி 103 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.