5 ஆவது நாளாகவும் நீர்வீழ்ச்சியில் யுவதியைத் தேடும் பணி முன்னெடுப்பு!!

 


டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி, இன்று 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே, இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளதாக திம்புளை– பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார்.

நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் ஆகியோர் இணைந்து, காணாமல் போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று சுமார் 200 பேர் அடங்கிய இராணுவ குழு, நீர்வீழ்ச்சியின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோதும் எனினும் காணாமல் போன யுவதியின் எந்த தடயமும் இதன்போது கண்டுபிடிக்கப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.