தீவிர பாதுகாப்பில் முல்லைத்தீவு!!


 முல்லைத்தீவு வட்டுவாகலில் பதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படையிரின் முகாமிற்கான காணி சுவீகரிப்புக்காக நாளை நில அளவைத் திணைக்களத்தினால் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினர் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்தே வட்டுவாகல் பகுதியில் விசேடமாக வீதிச்சோதனை நிலையத்தை அமைத்துள்ள படையினர், முகாமுக்கு முன்னால் விசேட பாதுகாப்பு கடமையிலும் சுற்றுக்காவல் நடவடிக்கையையும் கடற்படையினர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.