கொரோனா தொற்றாளர்கள் 6 பேர் மாயம்!

 


யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் ஆறு பேர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பருத்தித்துறை நகர் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்ற ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரத் தரப்பினர் அவர்களைத் தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு தொற்று உள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னரே அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகியிருப்பதாக தெரியவருகிறது.

அம்பாறை மாவட்டம் கல்முனையைச் சேர்ந்த அவர்கள் பருத்தித்துறை நகர் பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலைமறைவானவர்களை கொரோனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடம் சுகாதாரத் தரப்பினர் உதவி கோரியிருக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.