கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

 


தாதியர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக, நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

வவுனியா மருத்துவமனையில், மகற்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகளில் பணிபுரிந்து வரும் தாதியர்கள் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்கள் சிவில் உடையில் சென்றே பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அதோடு அவர்கள் பணிக்கு சமூகமளித்தமையையும் அவர்கள் உறுதிபடுத்தவில்லை. தாதியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என்பதனால் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையை பெற்றுக் கொண்டு , கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர்கள் தொழிற்சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

 மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வெளிக்கள நோயாளர்கள் , சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் மற்றும் ஒளடதங்களை எடுத்துச் செல்லவந்திருந்தவர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

இதேவேளை தாதியர்களின் போராட்டத்தால் கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் , தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.