வித்தியாசமாகத் தெரிந்த சூரியனின் தோற்றம்!!

 


இலங்கையில் சில பகுதிகளில் சூரியனை சுற்றி வளையம் ஒன்று தோன்றியமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இதனை பார்வையிடுவதற்காக பாரிய அளவிலான மக்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு நாங்கள் சூரிய மண்டலம் என்றே பெயரிட்டுள்ளோம்.

நீராவி மேல்நோக்கிச் செல்லும்போது, ​​அது பனி படிகங்களாக மாறும். இலங்கையில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக உயர் வளிமண்டலத்தில் மிகக்குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இதனால் அங்குள்ள நீர் சிறிய பனித்துகளா மாறி, சூரிய ஒளியை இவ்வாறு திரிபடைய செய்து வெளிப்படுத்துகிறது. அவை சூரியனை சுற்றி வெள்ளை வட்டத்தை ஏற்படுவதனை அவதானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.