யாழ்.வல்வெட்டித்துறை தீவிர கண்காணிப்பு வலயமானது!!

 


யாழ்.வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதியில் இரு நாட்களில் 48 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த பகுதி இன்று அதிகாலை 4 மணி தொடக்கம், சுகாதார பிரிவு மற்றும் படையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 48 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மக்கள் செறிந்து வாழும் குறித்த பகுதியை முடக்குவதற்கு சுகாதாரத் தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் கிராமத்துக்கான போக்குவரத்துக்கள் படைத்தரப்பினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் குறித்த பகுதி கொண்டுவரப்பட்டிருக்கின்றது.   

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.