வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் பதவி விலகுகிறார்!!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா அறிவித்துள்ளார்.
இதனை கடிதம் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அந்தக் கட்சியின் நகரசபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் தமிழ் தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அதனுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். இந்த நிலையில் தொடர்ந்தும் கூட்டமைப்பின் சார்பில் நகரசபைத் தலைவராகத் தொடர விரும்பாத காரணத்தினால் தாம் பதவி விலகுவதாக தவிசாளர் கோணலிங்கம் கருணானந்தராசா அறிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை