போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அறுவை சிகிச்சை!!

 


போப் ஆண்டவர் பிரான்சிஸ், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக அவதிப்பட்டுவரும் 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், போப் பிரான்சிசுக்கு எப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரியவில்லை. எனினும் அறுவை சிகிச்சை முடிந்ததும் அது குறித்த தகவல் வெளியிடப்படும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது.

போப் ஆண்டவர் பிரான்சிஸ், மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக மூன்று மணித்தியாலங்களுக்கு முன்பாக வழக்கமான ஞாயிறு வழிபாட்டில் அவர் பங்கேற்றார்.

அதில் கலந்துகொண்ட மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அவர் ஆசிகளையும் வழங்கினார். அப்போது இந்த அறுவை சிகிச்சை குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம் கடந்த வாரம் வழிபாட்டில் பங்கேற்ற மக்களிடம், தனக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த அறுவை சிகிச்சை குறித்தே அவர் இத்தகைய வேண்டுகோள் விடுத்திருந்ததாக கருதப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.