அவுஸ்ரேலிய நகரங்களில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்!!

 


கொவிட் தொற்றுகளின் உயர்வைச் சமாளிக்க விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அவுஸ்ரேலிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது 57பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) சிட்னியில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேனில் சிறிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சிட்னியின் மையப்பகுதி வழியாக அணிவகுத்துச் சென்றபோது மக்கள் ‘சுதந்திரம்’ என்று கோஷமிட்டனர்.

இதேபோல, ஆயிரக்கணக்கான மக்கள் சிட்னியின் மையப்பகுதிக்கு ஹேமார்க்கெட் புறநகர் வழியாக அணிவகுத்துச் சென்றனர். நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) சுகாதார ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை கொவிட் மையம் என்று அறிவித்திருந்தது.

சிட்னியின் டவுன் ஹாலுக்கு வெளியே கூடிய சில எதிர்பாளர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.

இதுதொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சுதந்திரமான பேச்சு அமைதியான கூட்டத்திற்கான உரிமைகளை அங்கீகரிக்கிறது

இருப்பினும், இன்றைய எதிர்ப்பு தற்போதைய கொவிட்-19 பொது சுகாதார உத்தரவுகளை மீறுவதாகும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொற்றுநோய்களின் எழுச்சிக்கு மத்தியில் அவுஸ்திரேலிய அரசாங்கம், நாடு முழுவதும் மீண்டும் முடக்கநிலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மிகவும் தீவிரமாக பரவும் டெல்டா மாறுபாட்டினால், எல்லை மூடல், தனிமைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஸ்னாப் முடக்கநிலை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொற்றுகள் பரவுவதை குறைவாக வைத்திருக்க உதவியது.

தடுப்பூசி வீதங்கள் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைவாகவே உள்ளன. 14 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.