கொரோனா தொற்று வவுனியாவில் அதிகரிப்பு!!


 வவுனியாவில் கர்ப்பவதி பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதில் குறித்த குடும்பத்தினர் உட்பட 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஓமந்தை அரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், குருமன்காடு பகுதியில் ஒரு கர்ப்பவதி பெண் உட்பட ஒரே வீட்டில் ஐந்து பேர், பனிக்கர்மகிழங்குளம் பகுதியில் ஒருவர், சாந்தசோலை பகுதியில் ஒருவர், கூமாங்குளம் பகுதியில் இருவர், மன்னகுளம் பகுதியில் ஒருவர், வேப்பங்குளம் பகுதியில் ஒருவர், மதவாச்சி பகுதியில் ஒருவர், குட்செட் வீதி பகுதியில் இருவர், கோதாண்டார்நொச்சிக்குளம் பகுதியில் ஒருவர், சமயபுரம் பகுதியில் ஒருவர், உக்குளாங்குளம் பகுதியில் ஒருவர், திருநாவற்குளம் பகுதியில் ஒருவர், பட்டானிச்சூர் பகுதியில் ஒருவர், உளுக்கொட்டேன பகுதியில் ஒருவர், வைரவபுளியங்குளம் பகுதியில் ஒருவர், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவர், பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவர், புகையிரத நிலைய விடுதியில் ஒருவருமாக 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்றுக்குள்ளாவரகளை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.