24 மணித்தியால தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பம்

 


Astra Zeneca தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் இன்று (01) முதல் வழங்கப்படுகிறது.


24 மணித்தியால எஸ்ட்ரா செனகா தடுப்பூசி வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Astra Zeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸை . கொழும்பு விகார மகாதேவி பூங்காவிலும் பத்தரமுல்ல தியத்த உயன வளாகத்திலும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்..

கொழும்பு - விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , Astra Zeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் தெரிவு செய்யப்பட்ட 18 பொது சுகாதார நிர்வாக அலுவலங்களிலும் 13 வைத்தியசாலைகளிலும் தெரிவு செய்யப்பட்ட 8 இடங்களிலும் வழங்குவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Astra Zeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டதற்கான அட்டையை இந்த நிலையங்களில் சமர்ப்பித்து இந்த இரண்டாவது ,Astra Zeneca தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக் கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.