ஆடிப்பூர விழா: கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்த பக்தர்கள்!

 


ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவில் பக்தர்கள் தங்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையைவிட்டு வடை எடுத்து காணிக்கை செலுத்தினர்.

கொதிக்கும் எண்ணெயில் இருந்து கைகளால் வடை எடுப்பதையும், பக்தர் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடிப்பதையும் காணலாம்
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையைவிட்டு வடை எடுத்து காணிக்கை செலுத்தினர்.
கொதிக்கும் எண்ணெயில் எடுத்த 7 வடைகள் அம்மனுக்கு படையலிட்டு ஏலத்தில் விடப்பட்டது.
குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் முதல் வடையை 5,100 ரூபாய்க்கும், 7-வது வடை ரூ.900 என மொத்தம் 7 வடைகள் 19,400 ரூபாய்க்கு ஏலம் போனது.
தொடர்ந்து அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.