இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று!


 இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதன்படி பைஸர் அல்லது அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்ற ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களிடையே குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


குறித்த பரிசோதனையின் போதே இரு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்து வருகின்றது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மே மற்றும் ஜூலை மாதமளவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தரவை உள்ளடக்கியே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அதில் பைஸர் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்டவர்களின் பாதுகாப்பு ஒரு மாதத்தில் 88% லிருந்து ஐந்து முதல் ஆறு மாதங்களில் 74% ஆகக் குறைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.


இதேவேளை அஸ்ட்ராசெனெகாவைப் பொறுத்தவரை, நான்கு முதல் ஐந்து மாதங்களில் 77% இல் இருந்து 67% ஆக குறைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.