யாழில் ஒரே நாளில் 239 பேருக்கு கொரோனா தொற்று!
யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினத்தில்(25) அன்ரிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி 239 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘யாழ் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 725 பேருக்கு இற்றைவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
யாழில் நேற்றைய கணக்கெடுப்பின்படி 213 பேர் இதுவரை இறப்புக்குள்ளாகியுள்ளார்கள். மேலும் 3 ஆயிரத்து 686 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 548 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனவே, யாழ் மாவட்டத்தில் பொதுமக்கள் இறுக்கமாக சுகாதார கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உங்களையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை