காபூலில் தீவிரவாத அமைப்பின் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மீது அமெரிக்கா தாக்குதல்

 


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்கா மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவான ஐ.எஸ் – கே (இஸ்லாமிக் ஸ்டேட் – கோரேசன்) அமைப்பின் உறுப்பினர்களை இலக்கு வைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


காபூல் விமான நிலையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்த தற்கொலை குண்டுதாரி ஒருவரை இலக்குவைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


“அவர் ஒரு வாகனத்தில் அப்பொழுது பயணித்துக்கொண்டிருந்தார். நாங்கள் இலக்கு வைத்த நபரை தாக்கி விட்டதாகவே நம்புகிறோம்,” என்று அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


இந்தத் தாக்குதலில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னமும் வெளிவரவில்லை.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.