சிறுவர்கள் தொடர்பில் தவறான காணொளி பதிவிட்ட 10 பேர் சிக்கினர்!!

 


இலங்கையில் சிறுவர்களை தவறான வகையில் காண்பிக்கும் வகையிலான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை சேகரித்த அல்லது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய 10 நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த 10 பேரையும் அடுத்த வாரத்திற்குள் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.   

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினால் சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காணொளிகள் அல்லது புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் உள்ள விசேட பிரிவு மற்றும் நவீன தொழிநுட்ப உபகரணங்கள் ஊடாக நாட்டில் எந்தவொரு பகுதியிலிருந்தும் மேற்குறிப்பிட்டவாறான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் எந்த முறைமையைப் பயன்படுத்தியேனும் சமூக வலைத்தளங்களில் சேகரிக்கப்படுமாயின் அந்த சந்தர்ப்பத்திலேயே அது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.