மட்டக்களப்பில் கொத்தலாவல சட்டத்திற்கெதிராக பேரணி!!

 


பல்கலைக்கழக ஆணைக்குழுவை சுயாதீனமாகவும் அதிகாரம் மிக்கதாகவும் மாற்றி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை கிழித்தெறி” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 10.30 மணி அளவில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் சமூகம் இணைந்து, இன்றைய தினம் ஒன்றிணைவோம் உரிமை வென்றெடுப்போம்" என்ற கோஷத்துடன் குறித்த கண்டனப் பேரணி முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் போராட்டத்தை முடித்துள்ளனர்.

ஆசிரியர்களின் போராட்டம் நாடுதழுவிய ரீதியாக இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் அனேகமானோர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

இதன்போது கொத்தலாவல சட்டத்தை கல்வியில் திணிக்காதே, இலவச கல்வியை பறிக்காதே என பல கோஷங்களுடன் போராட்டக்காரர்கள் பதாதைகள் தாங்கி இருந்தனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.