நீராடச்சென்றவர் சடலமாக மீட்பு- யாழில் சம்பவம்!!

 


யாழில் நீராடுவதற்காக கடலுக்குச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை, உதயபுரம் கடலுக்கு அதிகாலை குளிக்கச் சென்ற முதியவர் ஒருவரே இன்று காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்குச் குளிக்கச் சென்ற இவர் நீண்ட நேரமாகியும் காணாத நிலையில், காலை சடலமாக கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயதான மனுவேல் செபஸ்டியன் என இனங்காணப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.