இலங்கையில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணங்கள் பதிவு!!


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 198  பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று ( சனிக்கிழமை ) வைரஸ் தொற்றினால்   117 ஆண்களும் 81 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 154 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 44 பேர் மரணித்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,183 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொரோனா  தொற்றாளர்களின் எண்ணிக்கை 385,696 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 323,390 ஆக அதிகரித்துள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.