இங்கிலாந்தில் ஆம்புலன்ஸ்க்கு உதவும் இராணுவம்!!


இங்கிலாந்தில் உள்ள ஆம்புலன்ஸ் (மருத்துவ அவசர ஊர்தி) அறக்கட்டளைகளுக்கு உதவ இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி நான்கு ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளுக்கு நோயாளிகளை கவனிப்பதற்காக ஏறக்குறைய 100 இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அதிக தேவை மற்றும் ஊழியர் பற்றாக்குறை ஏற்படுமாயின் அவர், தேசிய சுகாதார சேவை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.

இங்கிலாந்தின் தெற்கு மத்திய, தென்மேற்கு, வட கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவைகள் இராணுவத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆம்புலன்ஸ் சேவையின் அழுத்தங்கள் தொற்றுநோய்க்கு மட்டுமல்ல என தெரிவிக்கப்படுகின்றது. முன்னோடியில்லாத வகையில் 999 அழைப்புகள் வந்துள்ளன.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.