இன்று சென்னையில் நிலஅதிர்வு!!

 


இன்று நண்பகல் 12 .39 மணி அளவில் சென்னையில் திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில், வங்க கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பகல் 12.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பூகம்ப எச்சரிக்கை மையம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்வு ரிக்டர் அளவையில் 5 புள்ளி ஒன்று ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.