யாழிலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம்!!

 


செவ்வாய்க்கிழமை,  யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில்   5.1 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆந்திராவில் காக்கிநாடாவின் தென்கிழக்கில் 296 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை தமிழகத்தின் சென்னையின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் பதிவாகவில்லை. நிலநடுக்கத்தின் தாக்கம் மிதமான தீவிரத்தன்மையுடன் கருதப்படுவதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.