பச்சைப்பயறு குழம்பு செய்யும் முறை!!

 


தேவையான பொருட்கள் :

பச்சைப் பயறு – 300 கிராம்

பச்சை மிளகாய் – 3

வெங்காயம் – 3 நறுக்கியது

தக்காளி – 3 நறுக்கியது

பூண்டு – ஒரு கைபிடி

சீரகம் – ஒரு டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

தனியா தூள் – 2 ஸ்பூன்

கரம் மசாலா – 2 ஸ்பூன்

உப்பு தேவையாள அளவு

சர்க்கரை 1 ஸ்பூன்

பட்டர் – ஒரு ஸ்பூன்

செய்முறை :

முதலில் பச்சை பயறை 3 மணி நேரம் ஊறவைத்து அதனை குக்கரில் முக்கால் பாகமாக வேகவைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். அடுத்து வாணலில் எண்ணெய் விட்டு சீரகம் பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் மஞ்சள்துள், கரம் மசாலா, தனியா தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்க்கவும். அநத கலவை நன்றாக சுண்டி கெட்டியாக வரும்போதும் அதனுடன் வேக வைத்து வைத்துள்ள பச்சை பயறைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அடுத்து மல்லி இலை சேர்த்து நனறாக வதக்கி அதில் பட்டர் சேர்த்து இறக்கி விடவும். சுவையான பச்சைப் பயறு கறி தயார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.