தீவிரப்படுத்தப்பட்டது கேரள கடற்கரைகளின் பாதுகாப்பு!!

 


கடல் மார்க்கமாக இலங்கைத் தமிழர்கள் சிலர் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் அளித்ததை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரள கடற்கரைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கிலிருந்து மீன்பிடி படகுகளில் பயணம் செய்து, தமிழகத்திற்குள் அந்த குழுவினர் ஊடுருவியிருப்பாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்திற்குள் நுழைந்த அவர்கள், தரை வழியாக கேரளாவின் கொச்சிக்கு சென்று, அங்கிருந்து படகுகளின் மூலம் வெளிநாட்டு பயணம் செய்யவுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து, தமிழக மற்றும் கேரள கடற்கரைகளில் கடலோர போலீஸாருடன், கடலோர காவல்படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.