29,403 அபாயகரமான வெடிபொருட்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில்!!

 


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுமாவட்டங்களில் 17,10,146 சதுரமீற்றர் பரப்பளவில் 29,403 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது வெடிபொருட்களை அகற்றும் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2021 ஓகஸ்ட் மாதம்; 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் 17,10,146 சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து 29,403 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை பகுதியில் துரித கதியில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.