இராதாகிருஷ்ணன் மலையக கட்சிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை!!
வடக்கு – கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பதுபோல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு – கிழக்கு மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு விடயங்களுக்கு எதிராக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது வரவேற்கக்கூடிய விடயமாகும் என அவர் தெரிவித்தார்.
அதேபோல மலையகத்திலும் சம்பள உயர்வு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை