இலங்கை இராணுவத் தளபதி விடுத்த முக்கிய அறிவிப்பு!!
நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் நாட்களில் தேவையற்று வெளியில் செல்வதை விடுத்து முடிந்தவரை வீட்டுக்குள் இருக்குமாறு இராணுவத் தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் , பொது மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை வரவழைக்க மட்டுமே பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை