இலங்கைக்கு சீனாவிடமிருந்து அவசர உதவி!!


 இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், கொவிட் தொற்று தீவிரமடைந்ததை அடுத்து ஏற்பட்ட ஒட்சிசன் தேவைப்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சீன தூதுவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சீன தூதுவர் குய் ஜென்ஹாங்கை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவுக்காக சீன அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிக்கப்பட்டது. முழு அளவில் அனைத்து நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான முன்னுரிமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சரின் புதிய நியமனத்திற்காக சீனத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இலங்கையின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கும், கொவிட்-1 தொற்றுநோயைத் தணிக்கும் முயற்சிகளுக்குமான சீனாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இதன் போது மீண்டும் வலியுறுத்தினார்

கொவிட்-19 ஒத்துழைப்பு, மக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள், பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் பல்துறைசர் ஒத்துழைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டதாக இந்தக் கலந்துரையாடல்கள் அமைந்திருந்தன.

குறிப்பாக, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக திரவ ஒட்சிசனை உடனடியாக வழங்குவதற்கு சீனாவின் உதவியை வெளிவிவகார அமைச்சர் கோரினார்.

Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.