பிக்பொஸ் இற்கு போட்டியாகவரும் மற்றுமொரு நிகழ்ச்சி!

 


விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பொஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்களை நிறைவுசெய்துள்ள நிலையில் , விரைவில் 5 ஆவது சீசனை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஸீ தமிழ் தொலைக்காட்சி ‘Survivor’ என்ற நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்படுகின்றது.

அதில் பங்கேற்கும் போட்டியாளர்களை ஒரு தீவுக்கு அழைத்து சென்று அங்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என்றும்,  கல்லந்துகொள்ளும்  போட்டியாளர்கள் இயற்கையின் ஆற்றலுக்கு எதிராக தங்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும். உடல் வெப்பத்திற்காக தீ மூட்டுவது, இயற்கைப் பொருட்களைக் கொண்டு கூடாரம் அமைப்பது உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை தேடிப் பெறுவது உள்ளிட்ட சவால்களை போட்டியாளர்கள் எதிர்கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.

இந்த போட்டியானது போட்டியாளர்களின் மன மற்றும் உடல் வலிமையை பரிசோதிக்கும் விதமாக அமையும் என கூறப்படுகிறது.

நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக நந்தா, விக்ராந்த், விஜயலட்சுமி, வி.ஜே.பார்வதி, இந்திரஜா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டாலும் போட்டியாளர்கள், தொகுப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தினால் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News  #Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilank#Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.