விஜய்சேதுபதி அலுவலகத்தில் நடந்த அரைமணி நேர படப்பிடிப்பு: என்ன படத்திற்காக தெரியுமா?


 மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அலுவலகத்தில் அரைமணிநேரம் திரைப்பட படப்பிடிப்பு ஒன்று நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. 

பிரபல இயக்குனர் சீனு ராமசாமியின் உதவியாளர் விஜயகுமார் என்பவர் இயக்கும் திரைப்படம் ’அழகிய கண்ணே’. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சஞ்சிதா ஷெட்டி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் இயக்குநர் விஜயகுமார் கூறிய போது ’இந்த படத்தில் நாயகன் உதவி இயக்குனர் கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும், அவர் ஒரு ஹீரோவிடம் கதை சொல்வது போன்ற காட்சியை படமாக்க பட வேண்டியது இருந்தது என்றும் இந்த இந்த காட்சிக்காக ஹீரோவை விஜய் சேதுபதி என நாங்கள் தேர்வு செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார். 

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய்சேதுபதியை தனக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் இளம் இயக்குநர்களுக்கு உதவும் தன்மை உடையவர் என்பதால் இந்த காட்சிக்கு அவர் உடனடியாக ஒப்புக் கொண்டது மட்டுமன்றி தனது அலுவலகத்திலேயே இந்த படப்பிடிப்பு நடத்த அனுமதியும் கொடுத்தார் என்றும் தெரிவித்தார். 

விஜய் சேதுபதி அலுவலகத்தில் விஜய்சேதுபதி நடிகராகவும் ஹீரோ இயக்குனராகவும் நடித்த காட்சி அரைமணிநேரத்தில் படமாக்கப்பட்டது என்றும், இந்த காட்சி மிகவும் நன்றாக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்த இந்த காட்சியை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.