இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

 


சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 551 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 75,058 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் உள்நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு வழியாக உள் நுழைய முயன்ற 833 வாகனங்களில் பயணித்த 1261 நபர்களும், வெளியேற முயன்ற 851 வாகனங்களில் பயணித்த 1307 நபர்களும் நேற்று சோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.