அம்பாந்தோட்டையில் இருவரின் உயிரை பறித்த கொடூர விபத்து!!


 திஸ்ஸமஹாராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்று வலது பக்கத்திற்கு திருப்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மதிலில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.