புலவர் புலமைப்பித்தனும் தமிழீழ விடுதலைப் பாடலும்..- ஓவியர் புகழேந்தி

 2007 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலை பாடல் ஒலிப்பேழை தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் கொடுக்கப்பட்டது. முதல் ஒலிப்பேழை – கடற்பு-களுக்காக செய்தோம். புலவர் புலமைப்பித்தன் அவர்களை சந்தித்து, பல ஆண்டுகாலம் இயக்கத்துடன் அறுபட்டிருந்த தொடர்பை புதுப்பித்தேன். அவர் மூன்று பாடல்களை எழுதினார். 1. இது கடற்பு- ப்படை, 2. மனித சுனாமி தான்.. 3. நாம் நீரிலும் வெடிக்கும் எரிமலைகள். மூன்றும் அற்புதமானப் பாடல்கள்.


பாடல்கள் அனைத்திற்கும் அற்புதமான எழுச்சி மிகுந்த இசையை அமைத்திருந்தார் இசையமைப்பாளர் தேவேந்திரன். பாடல்களை, பாடகர் கார்த்திக் இரண்டு பாடல்களையும் பாடகர் மனோ ஒரு பாடலையும் பாடினர்.


பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களை அய்யா புலவர் புலமைபித்தன் அவர்கள் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்.


என்றும் நீங்காத நினைவுகள்.


ஓவியர் புகழேந்தி .

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.