ஒரேநாளில் 639 பேர் கைது செய்யப்பட்டனர்!!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 639 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 69,288 பேர் கைதாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இதன்போது 40 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 69,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை