கொழும்பிலுள்ள ஆப்கான் தூதுவர் தலிபான்கள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு!!

 


ஆப்கானில் தலிபான்களால் அமைக்கப்பட்டிருக்கும் இடைக்கால அமைச்சரவையை ஏற்க முடியாதென கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதவர் அஷ்ரப் ஹய்தாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கடிதமொன்றை இலங்கை அரசாங்கத்திற்கும் அதேபோல கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் உலகில் உள்ள ஆப்கான் தூதரகங்கள் எதுவும் இந்த இடைக்கால அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை , ஆப்கானில் ஆட்சியமைத்துள்ள தலிபான்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.