மக்களை அச்சுறுத்திவந்தவர் கைக்குண்டுடன் கைது!!


 திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் கைக்குண்டொன்றுடன் நபரொருவரை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கமைய சந்தேக நபரை கைதகியுள்ளார். கைதான சந்தேகநபர் தேவநகர் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கும்பலொன்றை உருவாக்கி ஊர் மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், பல்வேறு குற்றங்களை செய்துவந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொலிசார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.