விடிவுக்காக தமிழ் இளைஞர்கள் சாதிக்க வேண்டும் – சி.வி.!!

 


அறிவை ஆயுதமாக தீட்டி தமிழரின் விடிவுக்காக இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்பை எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்’ என்ற ஆவணப்படம் நேற்று டொரண்டோ மற்றும் நியுஜேர்சியில் திரையிடப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இளைஞர்களே தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தமிழர் தாயக பகுதியில் 70 வருடங்களாக இடம்பெறும் நில அபகரிப்பை காலம் கடந்தாலும் ஆவணப்படமாக வெளியிடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களை கைப்பற்றி அவர்களின் இருப்பு, அடையாளம் மற்றும் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கை குறித்து எடுத்துரைப்பது மிகவும் அவசியமானது என்றும் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.