தொண்டமானாறு கடல் நீரேரியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!!
யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில், சடலம் ஒன்று மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முதியவர் எனவும் அவர் தொடர்பிலான தகவல்களை அறிய மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan
கருத்துகள் இல்லை