இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த பெண் கொரோனாவால் பலி!!


 யாழில் இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த தாயார் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா என்ற 25 வயதான இளம் பெண்ணே இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 4ம் திகதி முச்சு விடுவதில் சிரமப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 8ம் திகதி இரட்டை குழந்தைகளைப் பிரசவித்த பின்னர்  சுகயீனமடைந்த தாய், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இரட்டை குழந்தைகள் தற்பொழுது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள்  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.