இலங்கையில்  60 வயதுக்கு மேற்பட்ட 122 பேர் கொரோனவால் உயிரிழப்பு

 


நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


குறித்த அனைவரும் செப்டெம்பர் 11 உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,296 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி செப்டெம்பர் 11 உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு கீழ்பட்ட 01 பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 16 ஆண்களும் 05 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 61 ஆண்களும் 61 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட 122 பேர் செப்டெம்பர் 11 உயிரிழந்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாட்டில் மேலும் நேற்றைய தினத்தில் 2,641 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 485,921 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 412,812 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.