நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - டெல்லியில் சம்பவம்!!

 


டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் துப்பாகி சூட்டினை மேற்கொண்டவர்கள் வழக்கறிஞர்களை போல் உடையணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜிதேந்தர் கோகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.