வைத்தியர் சத்தியமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்பு!!

  


 நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி இன்று மீண்டும் தனது பதவியைப் பொறுப்பேற்கிறார்.

மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில் பிரித்தானியா  சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.

எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய வைத்தியர் த.சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்குமாறு சுகாதார அமைச்சு விசேட கோரிக்கை விடுத்துள்ளது. 

அதற்கமைய தனது மேற்படிப்பை பிற்போட்டு அவர் இன்று காலை 8 மணிக்கு தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.