புனர்வாழ்வின் பின் வெளிவந்தவர் கடத்தல்!!


 திருகோணமலை வரோதயனகரில்  புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் அவரது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு, குறித்த நபரை அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்கள் விசாரிக்க சென்றபோது குறித்த நடவடிக்கையை தாம் முன்னெடுக்கவில்லை என பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்தியக் காரியாலயத்தில் கடத்தப்பட்டவரது மனைவி மற்றும் தாயார் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு கடத்தப்பட்டவர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையாகி பல வருடங்களாக சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் அவரை தேடிக் கண்டுபிக்க உதவுமாறு கடத்தப்பட்டவரின் மனைவி மற்றும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilan

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.