மட்.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் விடுத்த முக்கிய அறிவிப்பு!


 இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது இவ்வாண்டு நடைபெறமாட்டாது என ஆலய பரிபாலனசபையினர் அறிவித்துள்ளனர்.

நாட்டில் தற்பொழுது நிலவும் கொவிட் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரிபாலசபையினர் தெரிவித்தனர். மட்டக்களப்பில் உள்ள மட்டு ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர்கள் இதனை கூறினர்.

முன்னதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய மஹோற்சவம் 15 பணியாளர்களுடன் இடம்பெறவிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் மஹோற்சவத்தை நாடாத்துவதில்லையென முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஆலய தலைவர் தெரிவித்துள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.