காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய மற்றுமொரு தந்தை உயிரிழப்பு!!

 






வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த மற்றொரு தந்தையும் நேற்று உயிரிழந்த சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வவுனியா, மதியாமடு, புளியங்குளத்தைச் சேர்ந்த செபமாலை இராசதுரை என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நாட்டில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் முடிவடைந்தபோது - 2009. 05. 24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் உயிரிழந்தவரின் மகனான இராசதுரை விஜி (வயது 22) என்பவரைக் கைது செய்தனர்.

அதன் பின்னர், அவர் குறித்த எந்தத் தகவலும் தெரிய வரவில்லை. தனது மகனைத் தேடியும் நீதி கோரியும் போராட்டங்கள் பலவற்றில் அவர் பங்கேற்று வந்திருந்தார்.

அதோடு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் 1,668 நாட்களைக் கடந்து நடத்தப்படும் போராட்டத் திலும் அவர் பங்கேற்று வந்திருந்தார்.

இந்த நிலையில், தனது மகன் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையிலேயே குறித்த தந்தையும் உயிரிழந்துள்ளார். 


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.