யாழ். கொக்குவில் பகுதியில் விசேட சுற்றிவளைப்பு!

 


யாழ்ப்பாணம்- கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

சமீப காலமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக இரகசிய தகவல், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த தகவலுக்கமைய இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால், கொக்குவிலில் பகுதியின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டு வீடுகளில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திடீரென சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.