லொஹான் ரத்வத்த இராஜினாமா - மனோகணேசன் காட்டம்!!

 


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி நீங்கியிப்பதானது ராஜபக்ஷ அரசினால் நடத்தப்பட்ட வெறும் கண்துடைப்பு நாடகமே என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது தந்தையார் பற்றிய செயற்பாடுகளை கண்டி உடதலவின்ன பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களைச் சென்று கேட்டால் தெரியவரும்.

சிறைச்சாலைக்குச் சென்று தமிழ்க் கைதிகளை முழந்தாலிடச் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கோரி இராஜினாமா செய்ததைஏற்க முடியாது.

இது மனித உரிமை மீறல். அப்படியென்றால் நானும் வெளியே சென்று நபரைப் பிடித்து சித்திரவதைசெய்த பின் மன்னிப்பு கேட்டு இராஜினாமா செய்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றும் மனோ கணேசன் இதன்போது கேள்வி எழுப்பினார். 

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.