இலங்கைக்கு 250 கோடி டொலர் கடன்!


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.

இதற்கான பேச்சுக்களை எரிசக்தி அமைச்சு ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கன்செப்ட் குளோபல் என்கின்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதுடன் , அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன் இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது.

மேலும் இதற்காக 03 சதவீத வருட வட்டி விதிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.