வவுனியாவில் கோயில் கும்பாபிஷேகம் கண்காணிப்பில்!!

 


வவுனியா - ஓமந்தை பகுதியில் சுகாதார பாதுகாப்பு விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி ஓமந்தை, நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அக்கிராமமே சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் அதில், 25 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த கிராமத்தில் சுமார் 100 பேர் வரையிலேயே வசித்து வரும் நிலையில், 38 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த கிராமம் கொவிட் அச்சுறுத்தல் மிக்கதாக மாறியுள்ளதால் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.